பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவர் பதவிக்கு நடிகர் ராதாரவி போட்டியிடுகிறார். இதற்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாரவியிடம், ரஜினி - கமலின் அரசியல் பயணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அப்போது பேசிய ராதாரவி, ரஜினி எனது நல்ல நண்பர், நல்லவர். அவர் அரசியலுக்கு வர வேண்டாம் என நினைக்கிறேன். சிஸ்டத்தை சரி செய்ய போகிறேன் என்கிறார். கர்நாடகாவில் போய் முதலில் சரி செய்யட்டும். தமிழகத்தை தமிழர்கள் ஆளட்டும் என்றார்.
கமல் பற்றி பேசும்போது, அவர் பெரிய மனிதர். அவர் பேசுவது படித்தவர்களுக்கு மட்டுமே புரியும். காவி, கருப்பு என ஏதோ கலர்கள் பற்றியெல்லாம் பேசுகிறார். எனக்கு புரியவில்லை என்றார்.