இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ் டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவர் பதவிக்கு நடிகர் ராதாரவி போட்டியிடுகிறார். இதற்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாரவியிடம், ரஜினி - கமலின் அரசியல் பயணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அப்போது பேசிய ராதாரவி, ரஜினி எனது நல்ல நண்பர், நல்லவர். அவர் அரசியலுக்கு வர வேண்டாம் என நினைக்கிறேன். சிஸ்டத்தை சரி செய்ய போகிறேன் என்கிறார். கர்நாடகாவில் போய் முதலில் சரி செய்யட்டும். தமிழகத்தை தமிழர்கள் ஆளட்டும் என்றார்.
கமல் பற்றி பேசும்போது, அவர் பெரிய மனிதர். அவர் பேசுவது படித்தவர்களுக்கு மட்டுமே புரியும். காவி, கருப்பு என ஏதோ கலர்கள் பற்றியெல்லாம் பேசுகிறார். எனக்கு புரியவில்லை என்றார்.