மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது, தெலுங்கு சினிமாவிலும் தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளவர் சூர்யா. மணிரத்னம் படத்தில் நடிகராக அறிமுகமானாலும் பாலா இயக்கத்தில் வெளிவந்த 'நந்தா' படம் தான் சூர்யாவையும் நடிகர் என ரசிர்களை ஒத்துக் கொள்ள வைத்தது.
அதன் பின் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த 'காக்க காக்க' படம் சூர்யாவை முன்னணி கமர்ஷியல் ஹீரோக்களின் வரிசையில் கொண்டு போய் சேர்த்தது. அதன் பின் கௌதம் மேனன், சூர்யா இணைந்த 'வாரணம் ஆயிரம்' படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அடுத்து மூன்றாவது முறையாக இருவரும் இணைந்த 'துருவ நட்சத்திரம்' படம் பூஜை போடப்பட்டதுடன் நின்று போனது.
அப்படத்திற்கான கதையை முழுமையாக கௌதம் மேனன் தயார் செய்யவில்லை என சூர்யா குற்றம் சாட்டி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரமாக அது அமைந்தது. அதன் பின் இருவரும் இணைந்த 'துருவ நட்சத்திரம்' படம் கைவிடப்பட்டது.
தற்போது, அதே பெயரில் அந்தப் படத்தை விக்ரம் நடிக்க கௌதம் மேனன் இயக்கி வருகிறார். இனி, கௌதம் மேனன், சூர்யா இணையவே வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் இருவரும் தற்போது இணக்கமாக ஆரம்பித்துள்ளனர். நேற்று கௌதம் மேனன் இயக்கிய 'உலவிரவி' ஆல்பத்தை சூர்யா தான் வெளியிட்டார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் 'காக்க காக்க' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் ஆசை இருப்பதாக கௌதம் மேனன் சொல்லியிருந்தார். ஒருவேளை அதற்காகக் கூட இந்த இணைப்பு இருக்கலாம் என்று கோலிவுட்டில் சொல்கிறார்கள். எப்படியோ மீண்டும் ஒரு 'காக்க காக்க' வெற்றி வந்துதான் சூர்யாவைக் காக்க வேண்டும்.