ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தென்னிந்தியத் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் தெலுங்கு, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் மற்ற மொழி, மாநிலத்தைச் சேர்ந்த நடிகைகள் தான் முன்னணியில் இருக்கிறார்கள். தமிழில், மலையாள, ஹிந்தி, தெலுங்கு நடிகைகளும் டாப் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளார்கள். அது போலவே, தெலுங்கில் தமிழ், மலையாள, ஹிந்தி நடிகைகள் தான் முன்னணியில் இருக்கிறார்கள்.
தமிழ்த் திரையுலகத்தில் உள்ள தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் பலரும் உறுப்பினர்களாக உள்ளார்கள். நடிகர் சங்கம் சார்பாக நடைபெறும் பல விழாக்களில் முன்னணி நடிகைகள் யாரும் அதிகமாகக் கலந்து கொண்டதேயில்லை. அவர்கள் வரவில்லை என்றாலும் கூட அவர்கள் மீது நடிகர் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அது பற்றி நடிகர் சங்கத்தினர் யாரும் பேசக் கூட மாட்டார்கள்.
ஆனால், தெலுங்கில் 'மூவி ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன்' தலைவர் சிவாஜி ராஜா மற்ற மொழி நடிகைகள் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். “ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்து உறுப்பினராக சேர்ந்துவிட்டு, மறுநாளே 20 லட்ச ரூபாய்க்கு மேல் செக்கை எடுத்து வந்து பணம் வாங்கித் தாருங்கள் என்று புகார் கூறுகிறார்கள். இங்கிருந்து பல கோடிகளை அள்ளிக் கொண்டு செல்கிறார்கள். ஆனால், எந்த ஒரு நிகழ்வுக்கும் அவர்கள் ஒத்துழைப்பதில்லை. 'மா'விற்காக சொந்தமாகக் கட்டடம் கட்ட ஒரு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். இனி, அவர்கள் எங்கள் அழைப்புக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் நாங்கள் உதவி செய்ய மாட்டோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
சிவாஜி ராஜவின் இந்தப் பேச்சு குறித்து இதுவரை முன்னணி நடிகர்கள், நடிகைகள் யாரும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.