‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
காற்று வெளியிடை படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை சில வெளிநாடுகளிலும் படமாக்க திட்டமிட்டிருக்கிறார் மணிரத்னம்.
உள்நாடு, வெளிநாடு என பல்வேறு இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றாலும் மொத்தப் படப்பிடிப்பையும் 55 நாட்களில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளாராம். அதாவது மே மாதத்துக்குள் படப்பிடிப்பு முடிவடையுமாம். திட்டமிட்டபடி செக்கச் சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டால் படத்தை ஜூலை மாதம் ரிலீஸ் செய்யவும் மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.
பொதுவாகவே திட்டமிட்டபடி குறுகியகாலத்தில் படப்பிடிப்பு நடத்துகிறவர் மணிரத்னம். 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், மன்சூரலிகான், ஜெயசுதா, தியாகராஜன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்தாலும் தன்னுடைய பாணியில் குறுகிய காலத்தில் படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டிருக்கிறார்.