'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரகுமான் நடித்த 'துருவங்கள் பதினாறு' படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் 'நரகாசூரன்'. இப்படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித், ஸ்ரேயா, ஆத்மிகா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். துருவங்கள் பதினாறு படத்தின் வெற்றியினால் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் நரகாசூரன் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
இந்தநிலையில் இந்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நரகாசூரன் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கவில்லை என்றும், வில்லன் போன்றதொரு நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமல்ல சந்தீப்கிஷன் ஏற்றுள்ள கதாபாத்திரம் வழக்கமான வில்லன் கேரக்டர் இல்லையாம்.
இது ஒருபக்கம் இருக்க, இந்த படத்தின் ரீ-ரெக்கார்டிங் வேலைகள் மாசிடோனியா (Macedonia) என்ற நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் படம் வெற்றியடைந்ததால் தன்னுடைய நடவடிக்கை தொடங்கி, பிலிம் மேக்கிங் வரை எல்லாவற்றிலும் ஹை பையாக இருக்கிறார் கார்த்திக் நரேன்.