துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
ரகுமான் நடித்த 'துருவங்கள் பதினாறு' படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் 'நரகாசூரன்'. இப்படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித், ஸ்ரேயா, ஆத்மிகா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். துருவங்கள் பதினாறு படத்தின் வெற்றியினால் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் நரகாசூரன் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
இந்தநிலையில் இந்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நரகாசூரன் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கவில்லை என்றும், வில்லன் போன்றதொரு நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமல்ல சந்தீப்கிஷன் ஏற்றுள்ள கதாபாத்திரம் வழக்கமான வில்லன் கேரக்டர் இல்லையாம்.
இது ஒருபக்கம் இருக்க, இந்த படத்தின் ரீ-ரெக்கார்டிங் வேலைகள் மாசிடோனியா (Macedonia) என்ற நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் படம் வெற்றியடைந்ததால் தன்னுடைய நடவடிக்கை தொடங்கி, பிலிம் மேக்கிங் வரை எல்லாவற்றிலும் ஹை பையாக இருக்கிறார் கார்த்திக் நரேன்.