ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'கபாலி' படத்தை தொடர்ந்து 'காலா' படத்தை இயக்கிவரும் பா.ரஞ்சித், இன்னொரு பக்கம் 'நீலம் புரொடக்ஷன்ஸ்' என்ற பட நிறுவனத்தை தொடங்கி தயாராப்பாளராகியும் விட்டார். இந்த நிறுவனம் சார்பில் 'பரியேறும் பெருமாள்' என்ற படத்தை தயாரித்துள்ளார். மாரி செல்வராஜ் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் கதிர் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநயகியாக ஆனந்தி நடிக்கிறார். இவர்களுடன் 'யோகி' பாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தயாரிப்பாளரான வினோத் இப்படத்தின் தயாரிப்பில் இணைந்துள்ளார். அவரது முயற்சியில் 'பரியேறும் பெருமாள்' படத்தை நல்ல விலை கொடுத்து வாங்கியுள்ளது லைகா புரொடக்ஷன்ஸ்.
'பரியேறும் பெருமாள்' படத்தை அடுத்த மாதம் (மார்ச்) வெளியிட பா.ரஞ்சித் முடிவு செய்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்னரே பா,இரஞ்சித்துக்கு லாபத்தைக் கொடுத்துவிட்டது 'பரியேறும் பெருமாள்.