பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் |
இயக்குனர்கள் மிஷ்கின், ராம், இருவரும் ஹீரோவாக நடிக்க, பூர்ணா கதாநாயகியாக நடித்த படம் சவரக்கத்தி. சென்ற வாரம் வெளியான 'சவரகத்தி' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அது மட்டுமல்ல, பத்திரிகையாளர்கள் மத்தியிலும் பாராட்டுக்களும், பாசிட்டிவ்வான விமர்சனங்களும் கிடைத்ததில் மகிழ்ந்துபோன மிஷ்கின், அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 'சவரகத்தி' படக்குழுவினருடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசும்போது மிஷ்கின் முக்கியமான விஷயம் ஒன்றை சொன்னார்.., “இந்த படத்தில் சிறந்த நடிப்பை வழங்கிய பூர்ணாவுக்காக நான் இன்னும் கதைகளை எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வாழ்நாள் முழுவதும் நான் அவருக்கு ஒரு நண்பனாக, சகோதரனாக, சிறிய தந்தையாக இருந்து பாதுகாப்பேன்.” என்று சொன்னார். மிஷ்கின் இப்படி சொன்னதும் பூர்ணா அழுதேவிட்டார்.