‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
இயக்குனர்கள் மிஷ்கின், ராம், இருவரும் ஹீரோவாக நடிக்க, பூர்ணா கதாநாயகியாக நடித்த படம் சவரக்கத்தி. சென்ற வாரம் வெளியான 'சவரகத்தி' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அது மட்டுமல்ல, பத்திரிகையாளர்கள் மத்தியிலும் பாராட்டுக்களும், பாசிட்டிவ்வான விமர்சனங்களும் கிடைத்ததில் மகிழ்ந்துபோன மிஷ்கின், அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 'சவரகத்தி' படக்குழுவினருடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசும்போது மிஷ்கின் முக்கியமான விஷயம் ஒன்றை சொன்னார்.., “இந்த படத்தில் சிறந்த நடிப்பை வழங்கிய பூர்ணாவுக்காக நான் இன்னும் கதைகளை எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வாழ்நாள் முழுவதும் நான் அவருக்கு ஒரு நண்பனாக, சகோதரனாக, சிறிய தந்தையாக இருந்து பாதுகாப்பேன்.” என்று சொன்னார். மிஷ்கின் இப்படி சொன்னதும் பூர்ணா அழுதேவிட்டார்.