'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
லைகா நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரியாக இருந்தவர் ராஜூ மகாலிங்கம். இவர், ரஜினியின் தீவிர ரசிகரும் கூட. ரஜினி அரசியல் பயணத்தை அறிவித்ததை தொடர்ந்து, தான் பதவி வகித்த லைகா நிறுவனத்தில், தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரஜினியின் கட்சியில் இணைந்தார்.
இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளராக ராஜூ மகாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இதுநாள் வரை ரஜினி மக்கள் மன்றம் தொடர்பான அறிக்கை வெளியாகும்போது, அதில் நிர்வாகி சுதாகரின் பெயர் மட்டும் இடம்பெற்றிருக்கும். இப்போது தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்றத்திற்கான நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நிர்வாகி சுதாகரின் பெயரோடு, ராஜூ மகாலிங்கம் பெயரும் இடம் பெற்றுள்ளது. அதில், அவருக்கு செயலாளர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஒன்றியத்துக்கான நிர்வாகிகள் விபரம்...
செயலாளர் : பி.மேகலா
இணைச்செயலாளர் : பழனி மகராஜன், செல்வம் கிறிஸ்டோபர், ஜாக்சன், எல்மோ
செயற்குழு உறுப்பினர்கள் : உலகநாதன், வடிவேல், சேக் முகமது, ஸ்டான்லி