பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
ராமின் உதவியாளர் மாரி செல்வராஜ். அவர் தற்போது இயக்கி உள்ள படம் பரியேறும் பெருமாள். இதனை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரித்துள்ளது. பா.ரஞ்சித் தயாரிக்கும் முதல் படம் இது. கதிர், ஆனந்தி நடித்துள்ளனர், சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனது சீடன் இயக்கி உள்ள படத்தை வாழ்த்தி ராம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
2006ல் கற்றது தமிழ் அலுவலகத்தில் ஒரு நல் இரவில் செல்வம் எங்கள் வாழ்க்கையில் வந்து சேர்ந்தான். என் அகம் புறம் என எல்லாம் தெரிந்த என் தோழமை அவன். என் முதல் மகன் அவன். அவனுடய 12 வருட உழைப்பின் பொறுமையின் முதல் விளைச்சல் “பரியேறும் பெருமாள்”. மாபெரும் சபைகளில் உனக்கு மாலைகள் விழ வேண்டும் செல்வம். விழும்.
அட்டக்கத்தி தமிழ் திரையுலகம் கண்டிராத மனிதர்களை, வெளியே முதன் முதலில் காட்சிப் படுத்திய படம். திரை மொழியில் தனக்கென ஒரு விதத்தை உருவாக்கிக் கொண்ட படம். பா.ரஞ்சித்தை அறிமுகப்படுத்திய படம். அட்டகத்தியின் வெற்றியே இன்று நீலம் என்ற தயாரிப்பு நிறுவனமாய், சக படைப்பாளியை அங்கீகரிப்பதும், அவர்களுக்கு தன்னுடைய வெற்றியை இடத்தை பங்கு கொடுப்பதும் பண்பட்ட படைப்பாளிகளால் மட்டுமே முடியும். அப்படியாப்பட்ட ஒரு கலைஞன் பா.ரஞ்சித்.
பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனத்தின் முதல் திரைப்படத் தயாரிப்பு மாரி செல்வராஜ்ஜின் பரியேறும் பெருமாள். வாழ்த்துக்கள்.
இவ்வாறு ராம் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்திருக்கிறார்.