டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய் தற்போது தனது 62வது படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார், ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். .
இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை அருகே உள்ள முட்டுக்காடு பகுதியில் உள்ள கடற்கரையில் செட்போட்டு நடந்து வருகிறது. கடைவீதி போன்று போடப்பட்ட செட்டில் இரண்டு வாலிபர்கள் ஒரு பெண்ணின் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடுவது போலவும், விஜய், அவர்களை தடுத்து நிறுத்தி பைக் ஓட்டகிறவனை அலேக்காக தூக்கி தரையில் அடிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.
இந்த காட்சியை சுற்றி படப்பிடிப்பு குழுவினர் நிற்கிறார்கள். படப்பிடிப்பில் செல்போனை பயன்படுத்தக்கூடாது என்ற கடுமையான விதிமுறை இருந்தும் யாரோ பின்னால் நின்று இந்த காட்சியை செல்போனில் படம்பிடித்து இணைய தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு காலா படத்தின் காட்சிகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.