அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
எந்த அளவுக்கு பாராட்டும் புகழும் கிடைக்குமோ அந்த அளவுக்கு ஏதோ ஒரு வடிவத்தில் பிரச்னையும் தேடிவரும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தான் புருவ நாயகி பிரியா வாரியரும், அவர் நடித்துள்ள ஒரு ஆதார் லவ் படத்தின் மாணிக்ய மலாராய பூவி பாடலும். கடந்த சில தினங்களாக அதிகம் ரசிக்கப்பட்டு வரும் பெண்ணாக மாறியுள்ளார் பிரியா வாரியர்.
இந்தநிலையில், இந்தப்பாடல் வரும் ஒரு வரி தங்களது மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக கூறி ஐதராபாத்தை சேர்ந்த முஸ்லீம் இளைஞர் அமைப்பினர் சிலர் புகார் அளித்துள்ளனர். இந்தப் பாடலில் நடித்த பிரியா வாரியர் மற்றும் பாடலை எழுதி, இசையமைத்து, பாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஓமர் லுலு கூறும்போது, “எந்த மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் இந்தப்பாடல் உருவாகவில்லை. அனைவரும் ரசிக்கும்படியான ஒரு பாடலாகவே இது உருவாகியுள்ளது. அப்படியும் தேவையில்லாத சர்ச்சைகள், பிரச்சனைகள் வந்தால் இந்தப்பாடல் இடம்பெறாமலேயே படத்தை ரிலீஸ் செய்வோம்” என கூறியுள்ளார்.