மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
தமிழ் சினிமாவில் ஹாரர் பட சீசன் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அதேசமயம், விவசாயிகள் பிரச்னைகளை மையமாகக்கொண்ட படங்கள் அதிகமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தில் விவசாயிகள் பிரச்னையை மையமாகக் கொண்ட கதையில் நடித்தார் விஜய். அதையடுத்து இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் தனது 62வது படத்திலும் விவசாய பிரச்னையை முன்னிலைப்படுத்தி நடித்து வருகிறார் விஜய்.
அதேபோல் சுப்ரமணிய சிவா இயக்கத்தில் சமுத்திரகனி நடிக்கும் வெள்ளை யானை என்ற படமும் விவசாயி பிரச்னையை சொல்லும் கதையில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் சமுத்திரகனி விவசாயியாகவே நடித்து வருகிறார்.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்து வரும் பூமாரங் படம் ஆக்ஷ்ன் கதையில் உருவானாலும் அதில் விவசாயம் சம்பந்தமான ஒரு ஆழமான விஷயத்தை பதிவு செய்ய இருக்கிறார்களாம்.
இதுதவிர இன்னும் சில படங்கள் விவசாயம் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகிறது.