வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் திரையுலகத்திலிருந்து புதிதாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் நுழைந்துள்ளார்கள். இருவருமே அவர்களது புதிய கட்சியைத் துவக்குவதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டார்கள்.
ரஜினிகாந்த் கடந்த ஆண்டு இரு கட்டமாக அவரது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். ஒவ்வொரு நாளிலும் ரசிகர்கள் முன்னிலையில் பேசி அவர்களை உற்சாகப்படுத்தினார். கடைசி நாளில் ஆன்மீக அரசியல் என்ற புதிய அரசியலை உருவாக்கப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
கமல்ஹாசன் ஹார்வர்டு பல்கலைக்கழம் வரை சென்று உரையாற்றி அவருடைய அரசியல் களம் வேறு என்பதைப் புரிய வைக்கும் முயற்சியில் இருக்கிறார். பிப்ரவரி 21ம் தேதி முதல் தன்னுடைய அரசியல் சுற்று பயணத்தை கமல்ஹாசன் ஆரம்பிக்க உள்ளார்.
ரஜினிகாந்தும் இப்போது அடுத்த கட்ட நகர்வுக்கு செல்ல உள்ளார். நாளை(பிப்., 14) முதல் மூன்று நாட்களுக்கு அவருடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. அவர்களது கருத்துக்களைக் கேட்டறிந்த பிறகு ரஜினிகாந்த் அவருடைய அடுத்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.