தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் திரையுலகத்திலிருந்து புதிதாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் நுழைந்துள்ளார்கள். இருவருமே அவர்களது புதிய கட்சியைத் துவக்குவதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டார்கள்.
ரஜினிகாந்த் கடந்த ஆண்டு இரு கட்டமாக அவரது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். ஒவ்வொரு நாளிலும் ரசிகர்கள் முன்னிலையில் பேசி அவர்களை உற்சாகப்படுத்தினார். கடைசி நாளில் ஆன்மீக அரசியல் என்ற புதிய அரசியலை உருவாக்கப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
கமல்ஹாசன் ஹார்வர்டு பல்கலைக்கழம் வரை சென்று உரையாற்றி அவருடைய அரசியல் களம் வேறு என்பதைப் புரிய வைக்கும் முயற்சியில் இருக்கிறார். பிப்ரவரி 21ம் தேதி முதல் தன்னுடைய அரசியல் சுற்று பயணத்தை கமல்ஹாசன் ஆரம்பிக்க உள்ளார்.
ரஜினிகாந்தும் இப்போது அடுத்த கட்ட நகர்வுக்கு செல்ல உள்ளார். நாளை(பிப்., 14) முதல் மூன்று நாட்களுக்கு அவருடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. அவர்களது கருத்துக்களைக் கேட்டறிந்த பிறகு ரஜினிகாந்த் அவருடைய அடுத்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.