பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர். இயக்குனர் பாலசந்தரின் இரண்டு அலுவலகங்கள் ஏலத்திற்கு வந்துள்ளதாக கடனைக் கொடுத்த வங்கி நாளிதழ்களில் ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் ஆளுமை இயக்குநராக இருந்த பாலசந்தர் குடும்பத்திற்கு இப்படி ஒரு நிலையா என பலரும் கவலை தெரிவித்ததோடு, பாலசந்தரின் குடும்பத்தாருக்கு போனில் இதுப்பற்றி விசாரித்துள்ளனர். இந்நிலையில் பாலசந்தரின் கவிதாலயா சார்பில் மகள் புஷ்பா கந்தசாமி இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு...
கவிதாலயா டிவி.தொடர் தயாரிப்புக்காக அரசுடமை வங்கி ஒன்றில் 2010-ல் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான வேறு சொத்துக்களை அடமானம் வைத்து கடன் வாங்கியது. 2015-ல் திரைப்பட மற்றும் டிவி தொடர் தயாரிப்புகளை நிறுத்தி டிஜிட்டல் தயாரிப்புகளை மேற்கொள்ள முடிவு செய்தது. முதலும், வட்டியும் சேர்த்து கணிசமான தொகையையும் செலுத்தி விட்டது. மீதமுள்ள கடன் பாக்கியை செலுத்துவதற்கு வங்கியுடன் ஒரே தவணையில் செலுத்த சட்டரீதியாக பேசி வருகிறோம்.
இந்த சமயத்தில் வங்கியின் விளம்பரத்தை பார்த்து பாலசந்தரின் வீடும், அலுவலகமும் ஏலத்துக்கு வந்துவிட்டதாக செய்தி பரவிட்டது. இதனால் யாரும் கலக்கம் அடைய வேண்டாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.