கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
வன்முறை தூண்டும் விதத்தில் பேசிய பாராதிராஜா மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
படவிழா ஒன்றில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, வைரமுத்துவிற்கு தலைகுனிவு ஏற்படும் வகையில் ஏதாவது நடந்தால் பிறர் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என வன்முறையை தூண்டும் விதமாக பேசினார். மேலும் கடவுள் விநாயகரை இறக்குமதி கடவுள் என்றும் குறிப்பிட்டார். இதுதொடர்பாக இந்து மக்கள் முன்னணி அமைப்பின் சார்பில் நாராயணன் என்பவர் பாரதிராஜா மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இருபிரிவினர் இடையே மோதலை தூண்டும் விதத்தில் பேசிய பாரதிராஜா மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம் என கோர்ட் உத்தரவிட்டது.