அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மோகன்லாலின் மகன் பிரணவ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள 'ஆதி' என்கிற படம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அந்தப்படத்தின் வெற்றியை மோகன்லால் உள்ளிட்ட பலர் கொண்டாடிக் கொண்டு இருக்க, நாயகன் பிரணவோ பட ரிலீசுக்கு முன்பே அமைதியை நாடி ரிஷிகேஷ் சென்றுவிட்டார்.
இந்தநிலையில் பட ரிலீஸ் தினத்தன்று பிரணவ் மோகன்லால் ரிஷிகேஷ் பனிமலையில் நடந்து செல்வது போன்ற ஒரு வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியானது. இதை பார்த்த கேரளாவை சேர்ந்த ஜிபின் ஜோசப் என்கிற ரசிகர், இதே ரிஷிகேஷில் வைத்து பிரணவை நான் சந்திப்பேன் என அதில் கமென்ட் போட்டிருந்தார்.
வழக்கம்போல அதை பலரும் விளையாட்டாக எடுத்துக்கொள்ள, ஜிபின் ஜோசப்போ தனது நண்பர்கள் சிலருடன் ரிஷிகேஷ் சென்று, தேடியலைந்து வழியில் பிரணவை சந்தித்து புகைப்படம் எடுத்து அதை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படி கூட ரசிகர்கள் இருப்பார்களா என பலரும் தங்களது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.