ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2009ஆம் ஆண்டு 'பழசிராஜா'வை தொடர்ந்து தற்போது 'மாமாங்கம்' என்கிற வரலாற்றுப்படத்தில் நடிக்கிறார் மம்முட்டி. இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று மங்களூரில் துவங்கியுள்ளது. நாளைமுதல் மம்முட்டி இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். தொடர்ந்து பத்து நாட்கள் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறதாம்.
17ஆம் நூற்றாண்டில் நடைபெறும் இந்த கதையில் சேகவர் என்கிற கேரக்டரில் நடிக்கிறார் மம்முட்டி.. இந்தப்படத்தை சஜீவ் பிள்ளை என்பவர் இயக்கவுள்ளார். இவர் பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்..
சுமார் 3௦ கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்தப்படம். மம்முட்டி படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.