ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள நடிகர் திலீப்பை பொறுத்தவரை நடிகை வழக்கில் கைதாகி, சிறைசென்று ஜாமீனில் தான் விடுதலையாகி இருக்கிறார். வழக்கின் விசாரணை அடுத்தகட்டத்தை நோக்கி நகரும் விதத்தில் தான் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆவதும், ஆகாததும் இருக்கிறது.
அதனால் தான் ஜாமீனில் இருக்கும் நாட்களை வீணாக்க விரும்பாத திலீப் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை மளமளவென முடித்துக்கொடுக்கும் வேளையில் இறங்கியுள்ளார். அந்தவகையில் சமீபத்தில் தான் 'கம்மார சம்பவம்' படத்தின் படப்பிடிப்பை முடித்தார்.
இதை தொடர்ந்து, தான் நடித்து முதற்கட்ட படப்பிடிப்புடன் நிற்கும் 'புரபெஷர் டிங்கன்' படத்தின் படப்பிடிப்பையும் இந்த மாதமே துவங்க சொல்லிவிட்டாராம். ஏப்ரலுக்குள் இந்தப்படத்தை முடித்துக்கொடுக்க திட்டமாம்.