விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
கே.பாலச்சந்தரால் சின்னத்திரை சீரியலில் ஹீரோவாக அறிமுகப்படுத்தப்பட்டவர் ராஜ்கமல். சஹானா தொடரில் அறிமுகமான ராஜ்கமல், அதன்பிறகு கவிதாலாயா தயாரித்த, கே.பாலச்சந்தர் இயக்கிய 12 தொடர்களில் நடித்தார். ராஜ்கமலுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இதற்கான வாய்ப்பு தேடியதில் மேல்நாட்டு மருமகன் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் வருகிற 16ந் தேதி வெளிவருகிறது. சின்னத்திரையில் ஹீரோவாக ஜெயித்தவர் பெரிய திரையில் ஜெயிப்பரா என்பது இன்னும் சில நாட்களில் தெரியும். இதுகுறித்து ராஜ்கமல் கூறியிருப்பதாவது:
தொடர்ந்து தொடர்களில் நடித்தால் சினிமா என்னும் கடலுக்குள் கால் பதிக்க முடியாது என்று, பிரபல இயக்குனர் ஒருவரின் அறிவுரைப்படி தொடரில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் தீவிரமாக வாய்ப்புத் தேடத் தொடங்கினேன். குணச்சித்திர வேடங்களுக்கான தேடலில் இருந்த எனது இயல்பான தோற்றம் இயக்குனருக்கு பிடித்துப்போக, உதயா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நான் “மேல்நாட்டு மருமகன்” திரைப்படத்தின் கதாநாயகன் ஆனேன்..
ஆனால் பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்த மேல்நாட்டு மருமகன், திரையிடுவதில் தாமதமானது. அந்த இடைவேளையில் “சண்டிக்குதிரை” என்னும் படத்திலும் எனக்கு கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது. மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு வரும் பிப்ரவரி 16, மேல்நாட்டு மருமகன் படம் திரைக்கு வருகிறது. இன்னும் இரண்டு படங்களில் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. என்கிறார் ராஜ்கமல்.