இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஜீவா தற்போது நடித்து வரும் படம் கொரில்லா. அவருடன் ஷாலினி பாண்டே நடிக்கிறார். படத்தில் நடிப்பது பற்றி ஜீவா கூறியதாவது:
கொரில்லா படம் வித்தியாசமான திரைக்கதையை கொண்டது. முழு நீள என்டர்டெயின்மென்ட் படம். இதன் படப்பிடிப்புகள் தாய்லாந்து பகுதியில் விரைவில் நடக்க இருக்கிறது. படத்தில் என்னுடன் சிம்பான்ஸி வகை குரங்கு நடிக்கிறது. அதனுடன் நடிப்பதற்காக தற்போது பழகி வருகிறேன். அந்த குரங்கிற்கு சாப்பிடு, நட, ஓடு உட்கார், வணக்கம் சொல்லு என்பது மாதிரியான சில வார்த்தைகள் தாய்லாந்து மொழியில் தெரியும், அதற்காக நானும் அந்த தாய்லாந்து வார்த்தைகள கற்று அதைக் கொண்டு அதனுடன் பழகி வருகிறேன். ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. போகப்போக அது என் பேச்சை கேட்க ஆரம்பித்துவிட்டது. படம் வெளிவரும் வரை அந்த குரங்கின் படத்தை வெளியிடக்கூடாது என்பது இயக்குனரின் அன்பு கட்டளை என்றார் ஜீவா.