'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பெங்களூரில் 10வது சர்வதேச திரைப்பட விழா வருகிற 22ந் தேதி தொடங்கி மார்ச் 1ந் தேதி வரை ஒரு வாரம் நடக்கிறது. இதில் 60 நாடுகளைச் சேர்ந்த 200 படங்கள் திரையிடப்படுகிறது. தாய்லாந்து, ஜெர்மனி, லத்தீன் அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த படங்கள் அதிக அளவில் திரையிடப்படுகிறது. ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய டு லெட் என்ற தமிழ் படமும், அசோகமித்ரன் ஆவண படமும் திரையிடப்படுகிறது. கர்நாடகாவில் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் ஆவணப்படமும் திரையிடப்படுகிறது.
சர்வதேசம், ஆசியா, இந்தியா, கன்னடம் ஆகிய 4 பிரிவுகளில் போட்டியும் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் படங்களுக்கு மார்ச் 1ந் தேதி நடக்கும் நிறைவு விழாவில் முதல்வர் சித்தராமைய்யா பரிசு வழங்குகிறார். தினமும் திரைப்படம் தொடர்பான கருத்தரங்குகள், விவாத அரங்குகள் நடக்கிறது. விழாவில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு திரைப்பட கலைஞர்கள் சுமார் 6 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள்.