ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வருகிற மார்ச் 1ந் தேதி முதல் புதிய திரைப்படங்கள் திரையிடப்படாது என்று தயாரிப்பாளர் சங்கம் ஸ்டிரைக் அறிவித்துள்ளது. இதனால் தியேட்டர்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசிக்க தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் அவரக்கூட்டம் வருகிற 17ந் தேதி திருச்சியில் நடக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தனது உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
நமது திரையரங்குகளின் தற்போதைய நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. அதுவும் கடந்த 3 மாதங்களாக வசூல் மிக மோசமாகி நம் திரையரங்கு தொழில் முடங்கும் ஆபத்தில் உள்ளது. மற்ற அமைப்பினரின் நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டியதுள்ளது, மத்திய, மாநில அரசுகளிடம் நம் தொழில் பிரச்சினைகளை எடுத்துச் செல்ல வேண்டியது உள்ளது. பிற துறையினரால் ஏற்படும் சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அதனால் நாம் அனைவரும் ஒன்று கூறி தற்போதைய நிலை குறித்து ஆராய்ந்து நல்லதொரு மாற்றம் காண வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதனால் வருகிற 17ந் தேதி திருச்சி மாயாஸ் ஓட்டலில் நடக்கும் சிறப்பு அவசரக்கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.