ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆர்யாவின் மார்க்கெட் தற்போது டல்லடித்துக்கொண்டிருக்கிறது. அமீர் இயக்கத்தில் அவர் நடித்து வந்த சந்தனத்தேவன் என்ற படம் பைனான்ஸ் பிரச்சினையால் கிடப்பில் கிடக்கிறது. அதையடுத்து, ஸ்டுடியோ கிரீன் தயாரித்து வரும் கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்துள்ளார் ஆர்யா. அதோடு, கெளதம் கார்த்திக் நடித்துள்ள இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தன்னை திருமணம் செய்து கொள்ள ஆர்வமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் ஆர்யா. அதையடுத்து, நூற்றுக்கணக்கான பெண்கள் அவரை திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக விண்ணப்பித்திருக்கிறார்கள்.
ஆனால், அப்படி ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக விண்ணப்பித்த பெண்களில் 16 பேரை செலக்ட் பண்ணி இப்போது ஒரு சீரியல் எடுக்கப் போகிறார்களாம். அதில் ஆர்யாதான் நாயகனாக நடிக்கிறாராம். வருகிற பிப்ரவரி 19 -ந்தேதி முதல் ஒளிபரப்பாகும் கலர்ஸ் டிவியில்தான் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாம்.
மேலும், இந்த 16 பெண்களில் ஒருவரைத்தான் ஆர்யா திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், இந்த செய்தி உண்மையா? இல்லை புதிதாக வரும் சேனல் பப்ளிசிட்டிக்காக நடத்தும் நாடகமா? என்பது போகப்போகத்தான் தெரியும்.