டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் பாகமதி. வழக்கமான ஹாரர் படம் என்கிற விமர்சனங்கள் வெளியானபோதும், வசூல்ரீதியாக இந்த படம் பெரிய சாதனை செய்திருக்கிறது. அதன்காரணமாக அனுஷ்காவின் ஸ்டார் ஹீரோயின் அந்தஸ்து மேலும் உயர்ந்து நிற்கிறது. அதனால், தொடர்ந்து கதையின் நாயகியாக நடிப்பதில் ஆர்வத்தை தீவிரப்படுத்தியுள்ளார் அனுஷ்கா.
இந்த நிலையில், அடுத்தபடியாக ஒரு படத்தில் நடிக்க அனுஷ்கா சைன் பண்ணி விட்டதாக டோலிவுட்டில் செய்திகள் பரவியுள்ளன. ஆனால் அனுஷ்கா அந்த செய்தியை மறுத்துள்ளார். அதேசமயம், பாகமதி ரிலீசுக்குப்பிறகு நிறைய கதைகள் கேட்டு வருகிறேன். இன்னும் கேட்கப்போகிறேன். அதன்பிறகு கேட்டதில் எனக்கு பிடித்த கதைகளை ஓகே செய்து நடிக்கப்போகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும், அடுத்தபடியாக சரித்திர கதையாக இல்லாமல் சமூக நோக்கமுள்ள ஒரு கதையில் நடிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் அனுஷ்கா.