தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் நடிப்பில் ஜனவரி 25-ந்தேதி திரைக்கு வந்த படம் பத்மாவத். சஞ்சய்லீலா பஞ்சாலி இயக்கிய இந்த படத்தில் சர்ச்சைக்குரிய விசயங்கள் இருப்பதாக சொல்லி படத்தை வெளியிட வடமாநிலங்களில் பலத்த எதிர்ப்பு, போராட்டங்கள் வெடித்தன. அதனால் படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியாமல் ரிலீஸ் தேதியை மாற்றிக்கொண்டே வந்தனர். பின்னர், நீதிமன்றம் படத்தை வெளியிட அனுமதி அளித்ததை அடுத்து சில வட மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் பத்மாவத் படம் வெளியானது.
மேலும், சர்ச்சைக்குரிய படமாகி விட்டதால் இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே திரையிட்ட அனைத்து மாநிலங்களிலும் நல்ல வசூல் இருந்து வந்தது. அந்த வகையில், ஆந்திராவைப் பொறுத்தவரை 2 வாரங்களில் ரூ.20 கோடி வசூலித்துள்ள பத்மாவத் படம் தொடர்ந்து வசூலித்துக் கொண்டிருக்கிறது. இந்தியில் அமீர்கான் நடித்து ஆந்திராவில் வெளியான டங்கல் படம் 2 வாரங்களில் ரூ. 21.12 கோடி வசூலித்தது.
தற்போதைய நிலவரப்படி டங்கலை விட பத்மாவத் படத்தின் வசூல் குறைவாக இருந்தபோதும், பத்மாவத் படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அடுத்த வாரத்தில் டங்கல் வசூலை முறியடித்து சாதனை செய்து விடும் என்கிறார்கள்.