ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
காற்று வெளியிடை படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் படத்துக்கு 'செக்கச்சிவந்த வானம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவருக்குப் பதிலாக அருண் விஜய் நடிக்கிறார்.
அவர் மட்டுமல்ல, பிரகாஷ் ராஜ், தியாகராஜன் ஆகியோரும் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். இவர்களுடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி சிம்பு, அரவிந்த் சாமி, விஜய்சேதுபதி ஆகியோரும் நடிக்கிறார்கள். இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவுக்கு சந்தோஷ் சிவன், எடிட்டிங்கிற்கு ஸ்ரீகர் பிரசாத் கூட்டணி அமைத்துள்ளனர். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். திலீப் சுப்பராயன் இப்படத்திற்கு ஸ்டன்ட் பணிகளை கவனிக்கிறார்.
மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரித்து நெகட்டிவ் ரைட்ஸை, லைகாவுக்கு விற்றுள்ளார். இப்படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கு 'நவாப்' எனப் பெயரிட்டுள்ளனர். செக்கச்சிவந்த வானம் படத்தின் கதை தொழிற்சங்கம் சம்மந்தப்பட்டது என்ற தகவல் அடிபடுகிறது. அனேகமாக தொழிற்சாலைகள் அதிகம் கொண்ட வட சென்னைப் பின்னணியில் இப்படத்தின் கதைக்களம் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.