தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜீவா நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியான சிவா மனசுல சக்தி படம் வெற்றியடைந்தது. எஸ்.எம்.எஸ். என்று சுருக்கமாக குறிப்பிடப்பட்ட அந்தப் படத்தின் சாயலில் 'சிவா மனசுல புஷ்பா' என்ற பெயரில் தற்போது ஒரு படம் தயாராகி வருகிறது.
இந்தப் படத்தின் விளம்பர போஸ்டர்களில் பார்லிமென்ட் கட்டடம் இடம்பெற்றுள்ளதை வைத்தே இது சர்ச்சைக்குரிய அரசியல்படம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் படத்தில் கதாநாயகனாக புதுமுகம் வாராகி நடிக்கிறார்.
ஸ்ரீவாராகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் வாராகியே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அவருடன் புதுமுகங்கள் ஷிவானி, நதியாஸ்ரீ, சுதா, டி சிவா, தவசி ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
'சிவா மனசுல புஷ்பா' படம் குறித்து வாராகியிடம் கேட்டால், “இந்தக் கதை நான் வாழ்க்கையில் சந்தித்த சம்பவங்களின், சர்ச்சைகளின் தொகுப்பு. நிஜத்தில் நடந்தவை. ஒருவருக்கொருவர் இரு எதிர் துருவங்களாக இருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்கள் இந்தக் கதையில் இடம்பெறுகிறது. படம் வெளியாகும்போது தமிழக அரசியலிலும் மக்கள் மத்தியிலும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தும்” என்கிறார்.”
இந்தப்படத்தில் சர்ச்சையை கிளப்பும் சில காட்சிகளும் உள்ளனவாம். இதன் காரணமாக சிவா மனசுல புஷ்பா படத்துக்கு கோர்ட்டில் தடை வாங்கிவிட வாய்ப்புள்ளது என்பதால், சென்சார் போர்டில் முக்கிய பொறுப்பு வகிக்கும் நடிகர் ஒருவர் வாராகிக்கு சில டிப்ஸ்களை கொடுத்திருக்கிறாராம்.