ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
ரஜினி தீவிர அரசியலில் குதிப்பதற்கு தயாராகி விட்டார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்து அவர்களை திருப்திபடுத்திவிட்டார். அவரது ரசிகர் மன்றம் மக்கள் மன்றமாக மாற்றப்பட்டுவிட்டது. பாபா முத்திரை லோகோ சில மாற்றங்களுடன் மன்ற லோகோவாக்கப்பட்டிருக்கிறது.
தற்போது மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் மாவட்டம் தோறும் சென்று மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி மாவட்ட நிர்வாகிகளை ரஜினியின் அனுமதியோடு நியமித்து வருகிறார்.
இந்த நிலையில் ரஜினி நேற்று தனது மன்ற நிர்வாகிகளுடன் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் திடீர் ஆலோசனை நடத்தினார். மாநில நிர்வாகிகள், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார் ரஜினி.
"தேர்தல் வரும்வரை அமைதியாக பணியாற்ற வேண்டும். யாரையும் தாக்கியோ, அல்லது என்னை புகழ்ந்தோ சுவரொட்டி ஒட்டக் கூடாது. மன்ற நடவடிக்கை குறித்து மீடியாக்களிடம் பேசக்கூடாது. அதிக உறுப்பினர்களை சேர்ப்பது. மக்களின் நம்பிக்கையை பெறுவது ஆகியவைதான் இப்போதைக்கு முக்கியம். குறிப்பாக படித்த இளைஞர்களை சேர்க்க வேண்டும். பதவி ஆசையுடன் பணியாற்றக்கூடாது" என்று ரஜினி அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.