ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் முன்னாள் ஹீரோ ஜிதேந்திரா. 150-க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். 75 வயதை கடந்துள்ள ஜிதேந்திரா தற்போது தயாரிப்பு துறையிலும் உள்ளார். இந்நிலையில் இவர் மீது உறவுக்கார பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார்.
அதில், தனக்கு 18 வயது இருக்கும்போது ஜிதேந்திராவிற்கு 28 வயது. ஷூட்டிங்கின் போது ஹிம்மாச்சல் அழைத்து சென்று ஓட்டலில் வைத்து என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என இப்போது புகார் கூறியுள்ளார். இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேசமயம் இதை ஜிதேந்திரா தரப்பு மறுத்துள்ளது. இதுதொடர்பாக அவரது வக்கில் கூறுகையில், இது முற்றிலும் பொய்யான புகார். அந்தமாதிரி எதுவும் நடக்கவில்லை என ஜிதேந்திரா கூறுகிறார். எந்த ஆதாரமும் இல்லாமல் சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது புகார் கூறுவது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளார்.