'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மோகன்லால் தற்போது நடித்து வரும் புதிய படம் 'நீராளி'. இந்தப்படத்தில் பார்வதி நாயர், நதியா இருவரும் முக்கிய வேடங்களில் நடித்தாலும் படத்தில் மோகன்லாலுக்கு கதாநாயகியே இல்லை. இதில் என்ன ஆச்சர்யம் என்றால் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லால் நடித்த 'நோக்கெத்த தூரத்து கண்ணும் நட்டு' படத்தில் தான் கதாநாயகியாக அறிமுகமானார் நதியா.
அதன்பின் இன்னும் மூன்று படங்களில் மோகன்லாலுடன் இணைந்து நடித்தாலும், இதில் எதுவுமே மோகன்லாலுக்கு ஜோடியாக நதியா நடிக்கவில்லை. இப்போது பல ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்து நடிக்கும் 'நீராளி' படத்திலும் அவர் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்பதும் இன்னொரு ஆச்சர்யம் தான்.
தவிர மும்பையில் வசித்துவரும் நதியாவுக்கு இத்தனை வருடங்களில் அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முதன்முறையாக அவரது ஊரான மும்பையில் நடைபெறுவதில் கூடுதல் சந்தோஷமாம்.