கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
கடந்த ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை கடத்தல் வழக்கில், மலையாள நடிகர் கைது செய்யப்பட்டு மூன்றுமாத சிறைவாசத்திற்குப்பின் ஜாமினில் விடுதலையானார். இந்த வழக்கில் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள அவர், தான் நிரபராதி என நிரூபிக்கும் விதமாக காய்களை நகர்த்தி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட நடிகை கடத்தப்பட்ட சமயத்தில் காருக்குள் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் வீடியோ காட்சிகளின் உண்மைத்தன்மையை ஆராய தனக்கு ஒரு வீடியோ பிரதி தருமாறு அங்கமாலி நீதிமன்றத்தில் வேண்டுகோள் வைத்தார் திலீப்.
ஆனால் விசாரணை குழு தரப்பிலோ இது ஆதாரங்களை அழிக்கும் செயல் என வாதிட, அதை ஒப்புக்கொண்ட நீதிமன்றம் திலீப்பின் கோரிக்கையை நிராகரித்தது. அதேசமயம் வீடியோக்கள் தவிர மற்ற சில ஆதாரங்களின் பிரதியை திலீப்பிறகு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதை தொடர்ந்து கேரளா உயர்நீதிமன்றத்தில் திலீப் மேல்முறையீடு செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது.