‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கியூப் மற்றும் யு.எப்.ஓ கட்டண உயர்வை கண்டித்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மார்ச் 1ம் தேதி முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்து. இந்த நிலையில் கியூப் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் டிஜிட்டல் சேவை வழங்கும் கியூப் மற்றும் யுஎப்ஓ நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை குறைப்பது, அல்லது அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்வற்காக வருகிற மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 7ந் தேதி தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகம் ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்த பிலிம் சேம்பர் நிர்வாகிகள், மாநில திரைப்பட சங்க நிர்வாகிகள் ஆகியோர் கியூப், யுஎப்ஓ நிறுவனங்களுடன் ஐதராபாத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த பேச்சுவார்த்தை மீண்டும் வருகிற 16ந் தேதி நடக்க இருக்கிறது. ஆனாலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மார்ச் 1ந் தேதி முதலான வேலை நிறுத்த அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.