ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கமல்ஹாசன் ஹார்வர்டு பல்லைகழகத்தில் உரையாற்றுவதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தில் அவர் வெளிநாட்டில் வாழும் தமிழர்களை சந்தித்துப் பேசுகிறார். அதன் ஒரு பகுதியாக அவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் தமிழ் விஞ்ஞானி கே.ஆர்.ஸ்ரீதரை சந்தித்துப் பேசினார். இவர் நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்துக் கொள்ளும் ப்ளூம் பாக்சை கண்டுபிடித்தவர்.
ஸ்ரீதரை சந்தித்த கமல், இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தும் சாத்தியகூறுகள் பற்றி அவருடன் விவாதித்தார். இதுகுறித்து கமல் கூறியதாவது: ப்ளூம் பாக்ஸ் திட்டம் எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. தமிழ்நாட்டிலும் இந்த திட்டத்தை பயன்படுத்தும் எதிர்காலத்தை என்னால் கணிக்க முடிகிறது. தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டிருக்கிறேன். இதனால் இந்தியாவும், தமிழகம் பெருமையுறும். என்றார்.
டாக்டர் ஸ்ரீதர் கூறும்போது, கமல்ஹாசனை சந்தித்ததில் மகிழ்ச்சி. உலகின் பிற நாடுகளிலும், இந்தியாவிலும் மின் உருவாக்கம் குறித்து அவருடன் விவாதித்தேன். எங்கள் திட்டத்தை உடனடியாக தமிழக கிராமங்களில் செயல்படுத்துமாறு அவர் எங்களை கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றார்.