ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அரசியலில் இறங்க ஆயத்தமாகிவிட்டதால் அது தொடர்பான வேலைகளில் பிஸியாக உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நிர்வாகிகளை நிர்வகித்து வருகிறார் ரஜினி. அதேப்போன்று, கமல், பிப்., 21-ம் தேதி ராமநாதபுரத்தில் தன் அரசியல் பயணத்தை துவக்குவதால் அதுதொடர்பான வேலைகளில் உள்ளார்.
இதனிடையே வாரஇதழ் ஒன்றில் கமல் எழுதி வரும் தொடரில், ரஜினியுடன் இணைவது என்பது இப்போது எடுக்க வேண்டிய முடிவு கிடையாது. அதற்கு காலம் தான் பதில் சொல்லும், இப்போது அது தேவையா என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, கமல் உடன் இணைவது குறித்து பேசுகையில், "நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். நாங்கள் இணைவது குறித்து காலம் தான் பதில் சொல்லும். தமிழ்நாட்டில் தான் சிஸ்டம் சரியில்லை, ஆகையால் அதை முதலில் சரி செய்ய வேண்டி இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் மற்றும் பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். 2.O படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடியவில்லை. ஆகையால் 2.O, காலா படங்களில் முதலில் எது ரிலீஸாகும் என்பது இரண்டு நாளில் தெரியவரும்.
இவ்வாறு ரஜினி கூறினார்.