'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கோலிவுட் வட்டாரங்களில் கடந்த இரண்டு நாட்களாகவே நயன்தாராவின் அடுத்த படம் பற்றிய பேச்சுதான் அதிகமாக உள்ளது. லட்சுமி என்ற ஆபாச குறும்படத்தை எடுத்து பரபரப்பை ஏற்படுத்திய சர்ஜுன் என்பவருக்கு நயன்தாரா கொடுத்துள்ள வாய்ப்பு மிகப் பெரும் வாய்ப்பு என்பதால் கோலிவுட்டில் உள்ள உதவி இயக்குனர்கள் பலரும் கடுப்பில் உள்ளார்கள்.
பல முன்னணி இயக்குனர்களே நயன்தாராவை அணுக முடியாமல், கதை சொல்ல முடியாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது ஒரு ஆபாசக் குறும்படத்தை எடுத்து நயன்தாரா வரை சென்றடைய முடியும் என்றால், இனி அது போலவே பலரும் ஆபாசக் குறும்படங்களை எடுக்க ஆசைப்படுவார்கள் என்கிறார்கள் அந்த உதவி இயக்குனர்கள்.
பத்து, பதினைந்து வருடங்களாக யாராவது ஒரு தயாரிப்பாளர் நமக்குக் கிடைக்க மாட்டாரா, ஒரு நடிகரிடம் கதை சொல்லி படம் எடுக்க மாட்டோமா என்று காத்துக் கிடப்பவர்கள் பல பேர். அவர்களால் சில லட்சங்கள் செலவு செய்து ஒரு குறும்படத்தைக் கூட எடுக்க முடியாது. அதே சமயம், பண வசதி உள்ள, சினிமாவில் நுழைய வேண்டும் என ஆசைப்படும் பலர் குறும்படத்தை எடுத்து, அதிலும் ஆபாசப் படத்தை எடுத்து எளிதில் பிரபலம் ஆகிவிடுகிறார்கள் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
நல்ல குறும்படங்களை எடுத்த கார்த்திக் சுப்புராஜ் போன்றவர்களே வணிக ரீதியாக தோல்விப் படங்களைக் கொடுத்ததால் அடுத்த வாய்ப்புக்குத் தடுமாறி வருகிறார்கள். குறும்படங்களிலிருந்து சினிமாவுக்கு வந்து சில வருடங்களுக்கு முன்பு பரபரப்பாகப் பேசப்பட்ட பலரைப் பற்றி இப்போது யாரும் பேசுவதில்லை.
உண்மையான சினிமா ஆசையுடன் இருக்கும் உதவி இயக்குனர்களாகிய தங்களுக்கு ஒரு நாள் சினிமா கதவுகள் திறக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் காத்திருக்கிறார்கள். அறம் போன்ற படத்தை இயக்கிய கோபி நயினார் போன்ற இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்த நயன்தாரா, அடுத்து ஒரு இயக்குனருக்குக் கொடுத்துள்ள வாய்ப்புதான் இப்போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.