பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
கடந்த மாதம் மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன், ஷிவதா நாயர் நடித்த 'சிகாரி சாம்பு' என்கிற படம் வெளியானது. கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் புலியை பிடிப்பதற்காக வரும் காமெடி கேரக்டரில் குஞ்சாக்கோ போபன் நடித்திருந்தார்.
ஆனால் அமர்சித்திர கதா என்கிற பதிப்பகம், படத்தின் டைட்டிலான 'சிகாரி சாம்பு' என்பது தாங்கள் வெளியிட்ட 'டிங்கிள்' என்கிற புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரம் என்று கூறியது. மேலும், தங்களின் அனுமதி பெறாமல் அதை படத்தில் பயன்படுத்தியதால் தங்களுக்கான காப்புரிமை தொகையை தரவேண்டும் என்றும் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
பின்னர் நீதிபதியின் அறிவுறுத்தலின்படி பதிப்பகத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பட தயாரிப்பு நிறுவனம், அவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் வழங்குவதாக ஒப்புக்கொண்டது. மேலும் வேறு மொழிகளில் இதேபெயரில் இந்தப்படத்தை டப்பிங் செய்யவோ, ரீமேக் செய்யவோ மாட்டோம் என்றும் உறுதியளித்துள்ளனர்.