பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தமிழ்த் திரையுலகத்தில் சில அழுத்தமான காதல் மற்றும் ஆக்ஷ்ன் கதைகளை வித்தியாசமாகக் கொடுத்த இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். அவரது இயக்கத்தில் வெளிவந்த 'காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா, என்னை அறிந்தால்' ஆகிய படங்கள் ரசிகர்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்பட்ட படங்கள். இந்தப் படங்கள் வெளியான கால கட்டங்களில் பெரிய ரசனை மாற்றத்தையும் ஏற்படுத்தியவை என்றும் சொல்லலாம்.
இந்த 2018ம் ஆண்டில் மட்டும் பல 'பார்ட் 2' படங்கள் தயாராகி வருகின்றன. அப்படி 'பார்ட் 2' படங்களை இயக்க வேண்டும் என்றால் எந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குவீர்கள் என்ற சமீபத்தில் வெளியான பேட்டி ஒன்றின் கேள்விக்கு இயக்குனர் கௌதம் மேனன் பதிலளித்துள்ளார்.
“விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் கார்த்திக் எட்டு வருடம் கழித்து என்ன செய்கிறார் என எடுக்கலாம். 'என்னை அறிந்தால்' சத்யதேவ் அடுத்தடுத்து என்ன செய்வார் என யோசித்துக கொண்டிருக்கிறேன். 'வேட்டையாடு விளையாடு' படத்திற்கும் இரண்டாம் பாகம் உருவாக்கலாம். ஆனாலும், பலரும் 'காக்க காக்க 2' எடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சூர்யாவுக்கும் அது பிடிக்கலாம்,” எனச் சொல்லியிருக்கிறார் கௌதம் மேனன்.
'காக்க காக்க' மூலம் சூர்யாவுக்கு தனி அடையாளத்தைக் கொடுத்தவர் கௌதம் மேனன். ஆனால், அவருடனேயே சண்டை போட்டு 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடிக்க மறுத்தார் சூர்யா. எதிர்காலத்தில் இவர்கள் இருவரும் 'காக்க காக்க 2' படத்திலாவது ஒன்று சேர்வார்களா ?.