பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
மணிரத்னம் இயக்கும், கடல் படத்தின் சூட்டிங் தூத்துக்குடியில் உள்ள கடற்கரை கிராமமான மணப்பாடில் துவங்கியது. ராவணன் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படம் கடல். இப்படத்தின் நாயகனாக கார்த்திக் மகன் கவுதம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜூனும், அரவிந்த்சாமியின் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மீனவர்களின் வாழ்க்கையை பற்றிய கதை என்பதால் படத்தை முழுக்க முழுக்க கடற்கரை கிராமங்களில் படமாக்க இருக்கிறார். முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமமான மணப்பாடில் முதல் காட்சியை படமாக்கி இருக்கிறார் மணி. இனி தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் நடக்க இருக்கிறது.