'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரஜினியுடன் கூட்டணி வைப்பது இப்போது எடுக்க வேண்டிய முடிவு கிடையாது என நடிகர் கமல் கருத்து தெரிவித்துள்ளார்.
வார இதழில் நடிகர் கமல் எழுதிய கட்டுரையில், நடிகர் ரஜினியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலில் கூறி இருப்பதாவது : ரஜினியுடன் இணைவது என்பது இப்போது எடுக்க வேண்டிய முடிவு கிடையாது. அதற்கு காலம் தான் பதில் சொல்லும். நானும் ரஜினியும் கூட்டணி வைப்பது தேவையா என்பது குறித்து இருவருமே யோசிக்க வேண்டும். இருவரின் கொள்கை விளக்கங்கள் பொருந்துகிறதா என்று பார்க்க வேண்டும் என்றார்.
போக்குவரத்து தொழிலாளர்கள் விசயத்தில் அரசு முதலாளித்துவத்தை காட்டுகிறது. வேலை நிறுத்தம் நாட்களில் 7 நாள் சம்பளம் பிடித்தம் என்பது அதிகப்படியான தண்டனையாகும். இது மாதிரியான சிக்கலுக்கு தீர்வையும், புது திட்டங்களையும் உருவாக்க வேண்டும். போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னை தீர்வுகளுக்காக அறிஞர் விஞ்ஞானிகளை நாட உள்ளேன். பல கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள நல்லவர்கள் வந்தால் நாங்கள் சேர்த்து கொள்வோம். அரசியல் ரீதியாக எனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு கேரள முதல்வர் பிரணாயி விஜயன் தீர்த்து வைக்கிறார் என கமல் கூறினார்.