பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சரத்குமார் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஏ.வெங்கடேஷ். மகாபிரபு, சாணக்கயா, ஏய், சண்டமாருதம் படங்களை சரத்குமாரை வைத்து இயக்கினார் வெங்கடேஷ். அவர், தற்போது சரத்குமார் நடிப்பில் பாம்பன் என்ற படத்தை இயக்குகிறார். இந்த படம் பற்றி அவர் கூறியதாவது:
நீண்ட நாட்களாகவே எனக்கு பாம்பு படம் ஒன்று இயக்க வேண்டும் என்கிற ஆசை. இதனால் பாம்பு மனிதர்கள் பற்றிய பல செய்திகளை சேகரித்தேன். நீயா படத்தில் இச்சாதாரி என்ற பழிவாங்கும் பாம்பு அறிமுகமானது போல் எனது கதையிலும் ஒரு பாம்பு அறிமுகமாகிறது. இரண்டு வருடங்கள் இந்த கதையை எழுதினேன். இதில் நடிக்க நல்ல உடல்வாகுள்ள ஒரு ஹீரோ தேவை. பாம்பாக நடிக்க யார் முன்வருவார்கள் என்ற தயக்கம் இருந்தது. சரத்குமாரிடம் கதை சொல்ல சென்றேன். அவர் நானே நடிக்கிறேன் என்று கூறிவிட்டார். அதன்பிறகு அவரை வைத்து போட்டோ ஷூட் எடுத்தோம். கச்சிதமாக அந்த கேரக்டருக்கு பொருந்தி நின்றார்.
சரத்குமார் தனித்துவமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடி கிடையாது. ஆனால் ஒரு புதுமுக நடிகர் ஒருவர் அறிமுகமாகிறார் அவருக்கு ஜோடியாக லட்சுமிமேனன் அல்லது வேதிகா நடிக்கலாம், பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இவர்கள் தவிர கஞ்சா கருப்பு, மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, கோட்டா சீனிவாசராவ், வின்செண்ட் அசோகன், ரித்விகா உள்பட பலர் நடிக்கிறார்கள். என் கேரியரில் இது முக்கியமான படம். பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் பலகோடி செலவு செய்கிறோம். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக உருவாகிறது என்றார் ஏ.வெங்கடேஷ்.