ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பத்மாவதி படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்து படம் வெளியான இடங்களில் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. முக்கியமான வசூல் தரக்கூடிய ஹிந்தி பேசும் பகுதிகளில் இன்னும் படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் அடுத்து கங்கனா ரணாவத் நடிக்கும் மணிகர்னிகா : தி குயின் ஆப் ஜான்சி படத்திற்கு இப்போதே எதிர்ப்பு வரத் தொடங்கிவிட்டது.
ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய வீரமங்கை ஜான்சி ராணியின் வரலாற்று கதை இது. இதனை பிரபல தெலுங்கு பட இயக்குனர் கிரிஷ் இயக்குகிறார். தமிழில் வானம் படத்தை இயக்கியவர் இவர். ஜீ ஸ்டூடியோ தயாரிக்கிறது. ஷங்கர் இஷான் லாய் இசை அமைக்கிறார், வி.எஸ்.ஞானசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதில் கங்கனா ரணாவத் ஜான்சி ராணியாக நடிக்கிறார். சோனு சூட், அதுல் குல்கர்ணி, ஜிசு செங்குப்தா, சுரேஷ் ஓபேரி, உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் ஜான்சி ராணிக்கும், ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி ஏஜண்ட் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்படுவதாக காட்சிகள் இடம்பெறுகிறதாம். இது ஜான்சியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் என்று சர்வ பிராமண மகாசபா என்ற அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக இந்த அமைப்பின் தலைவர் சுரேஷ் மிஸ்ரா படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
"தங்கள் படத்தில் ஜான்சி ராணிக்கும், ஆங்கிலேய அதிகாரிக்கும் காதல் இருப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக அறிகிறோம். அப்படி இருந்தால் பத்மாவதி படத்துக்கு ஏற்பட்ட நிலை தான் உங்கள் படத்துக்கும் ஏற்படும்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.