அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் சேவை பிரச்னை தொடர்பாக மார்ச் 1 முதல் படங்கள் வெளியீடு இல்லை என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
தொடர்ந்து பல வருடமாக நடைமுறையில் இருந்து வரும் மிக அதிகப்படியான கட்டணத்தினை குறைக்க வேண்டி பலமுறை நேரிலும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டு கேட்டும், கொஞ்சமும் செவிசாய்க்காத DSP எனப்படும் டிஜிட்டல் சேவை வழங்குனர்களுக்கு எதிராக ஆந்திரா, தெலுங்கனா, கர்நாடகா, மற்றும் கேரளாவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், வருகிற மார்ச் 1-ம் தேதி முதல் திரைப்படங்களை திரையிடப் போவதில்லை என ஏகமனதாக முடிவெடுத்து அறிவித்துள்ளார்கள்.
பிப்ரவரி 1-ம் தேதி இந்த பிரச்சினை தொடர்பாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடந்த கூட்டத்தில் இது பிரச்னை சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது. இதில், டிஜிட்டல் சேவை வழங்குனர்களுக்கு எதிராக மற்ற மாநில தயாரிப்பாளர் சங்கங்களின் போராட்டத்தில் இணைந்து, அதற்கு ஆதரவு தருவது என முடிவு செய்யப்பட்டது. எனவே, மார்ச் 1-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் எந்த ஒரு திரைப்படத்தையும் வெளியிடுவதில்லை என தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏகமனதாக முடிவெடுத்துள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.