ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகத்தில் தான்தான் மீண்டும் நம்பர் 1 நடிகை என்பதை நயன்தாரா நிரூபித்திருக்கிறார். திரையுலகத்தில் அவருக்குப் பின் அறிமுகமான நடிகைகள் கூட பட வாய்ப்புகள் இல்லாமல் ஒதுங்கி விட்டார்கள். ஆனால், 15 வருடங்களுக்கு முன்பு சினிமாவிற்குள் வந்த நயன்தாரா இன்னமும் அவருக்கென தனி இடத்தைத் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது, “இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா” ஆகிய தமிழ்ப் படங்களிலும், 'சைரா நரசிம்ம ரெட்டி' தெலுங்குப் படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்தப் படங்களுடன் நயன்தாராவின் புதிய பட்டியலில் நேற்று மேலும் இரண்டு படங்கள் சேர்ந்துள்ளன.
'விசுவாசம்' படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பும், 'லட்சுமி, மா' குறும்படங்களை இயக்கியவரும், சத்யராஜ் நடிக்கும் 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தை இயக்கியவருமான சர்ஜுன் கே.எம். இயக்கத்தில் நடிக்கப் போகும் படத்தின் அறிவிப்பும் நேற்று ஒரே நாளில் வெளியாகின.
இந்தப் படங்களையும் சேர்த்தால் நயன்தாரா கைவசம் தற்போது 5 படங்கள் உள்ளன. இன்னும் சில படங்களிலும் அவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.