பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
ஒரு படத்தை ஓட வைக்கவும், மக்களிடம் கொண்டு சேர்க்கவும் எப்படியெல்லாம் விளம்பரப்படுத்த வேண்டும், புரமோஷன் செய்ய வேண்டும் என்பதை தமிழ் நட்சத்திரங்கள், ஹிந்தி நட்சத்திரங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலரான அருணாச்சலம் முருகானந்தம் என்பரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் பேட் மேன். அக்ஷ்ய்குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் உள்ளிட்டவர்கள் நடிக்கும் இப்படத்தை பால்கி இயக்கியுள்ளார்.
பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை குறைந்த விலையில் தயாரித்துக் கொடுக்க அருணாச்சலம் முருகானந்தம் எப்படி போராடினார் என்பதுதான் படமாக உருவாகியுள்ளது. இப்படம் வரும் 9ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தைப் பற்றி புரமோஷன் செய்வதற்காக ஹிந்தி நடிகர், நடிகைகள், பிரபலங்கள் பலரும் சானிட்டரி நாப்கின்களை கையில் பிடித்துக் கொண்டு போஸ் கொடுத்து படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்கள்.
ஒரு நடிகர் அல்லது நடிகை இப்படி போஸ் கொடுத்து அவர்கள் மேலும் சில நடிகர்களை இப்படி போஸ் கொடுங்கள் என சேலஞ்ச் செய்வது கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
படத்தின் நாயகிகளில் ஒருவரான சோனம் கபூர், அப்பா நடிகர் அனில் கபூர் இதற்கான வீடியோ ஒன்றில் கூட நடித்துள்ளார். இது படத்திற்கான விளம்பரம் என்பதையும் மீறி மக்களிடம் அது குறித்து ஒரு விழிப்புணர்வு வர வேண்டும் என்று படக்குழுவினர் ஆரம்பித்துள்ளார்கள்.
தமிழ் நடிகர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் அவராகவே இப்படி ஒரு போஸ் கொடுத்து, ““மாதர் தம்மை இழிவு செய்யும் மடமைதனை கொளுத்துவோம். பெருந்தமிழர் #ArunachalamMuruganantham வழி நின்று உலகுக்கு உரக்க சொல்வோம் பெண்கள் மாதந்தோறும் எதிர் கொள்ளும் “மாதவிடாய்”இயற்கையே,” என ஜிவி. பிரகாஷ் அவருடைய டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.