பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
இந்தியத் திரையுலகத்தில் தங்களுக்கென தனி இடத்தை வைத்திருப்பவர் நாகார்ஜுனா. நடிக்க வந்து சுமார் 30 வருடங்கள் ஆனாலும் இன்னும் அதே இளமையுடன் இருப்பவர் என்று ரசிகர்களால் பாராட்டப்படுபவர் நாகார்ஜுனா. தமிழில் அவர் நடித்து சுமார் 30 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த உதயம், இதயத்தைத் திருடாதே” ஆகிய டப்பிங் படங்கள் பெரிய வசூல் சாதனை படைத்தன.
ரட்சகன், தோழா ஆகிய நேரடித் தமிழ்ப் படங்களில் நடித்துள்ள இவர், மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை நடிகர் தனுஷ் இயக்க உள்ளாராம். ப பாண்டி படத்தின் மூலம் இயக்குனரான தனுஷ் தற்போது வட சென்னை, மாரி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் தனுஷ், நாகார்ஜுனா நடிக்கும் படத்தை இயக்கலாம் என்கிறார்கள்.
தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள இந்தப் படம் சரித்திரப் படமாக இருக்கலாம் என்றும், தனுஷ் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் சொல்கிறார்கள். ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டுடியோஸ் இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.