அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் கண்ணே கலைமானே படத்தில் உதயநிதி ஜோடியாக நடிக்கிறார் தமன்னா. இதன் படப்பிடிப்புகள் மதுரையில் தொடங்கி நடந்து வருகிறது. தமன்னா நடித்து வருகிறார். படப்பிடிப்பின் இடைவெளியில் தமன்னா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
நேற்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாகரீக உடை அணிந்து வந்த தமன்னா கடைவீதியில் காரைவிட்டு இறங்கி அம்மன் சன்னதி வழியாக கோவிலுக்குள் சென்றார். மீனாட்சி அம்மன் சன்னதி, சுந்தரேசுவரர் சன்னதிகளுக்கு சென்று வழிபட்டார். முக்கிய பிரமுகர்கள் வழியாக செல்லாமல் பக்தர்களுடன் வரிசையில் நின்று சாமி கும்பிட்டார்.
சில தினங்களுக்கு முன்னர் மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து கேள்விப்பட்டு, கோயிலுக்கு வந்ததாகவும், அதுகுறித்து மனவேதனை அடைந்ததாகவும் கூறப்படுகிறது.